முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.
பெண்கள், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் செயல்படுத்தப்படும் குரு அபிமானி திட்டத்தின் கீழ் இந்த தொகை 5000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இந்த புதிய கொடுப்பனவு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த கொடுப்பனவை வழங்குமாறு அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

