Last Updated:
முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைக்கப்படவில்லை எனவும், அது ஆதாரமற்றது எனவும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் அரங்கேறி வரும் சம்பவங்கள் எல்லாம் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது.
இந்நிலையில், விரைவு ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கையை தெற்கு ரயில்வே குறைத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி சென்னை – மைசூர் காவிரி விரைவு ரயில், சென்னை – திருவனந்தபுரம் மெயில், சென்னை – ஆலப்புழா அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ஐந்து ரயில்களில் இருந்த நான்கு முன்பதிவு பெட்டிகளை இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், சென்னை – ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை – ஐதராபாத் அதிவிரைவு ரயில், சென்னை – நாகர்கோவில் அதி விரைவு ரயில், புதுச்சேரி – மங்களூரு விரைவு ரயில் உள்ளிட்ட எட்டு ரயில்களில் இருந்த நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டிருக்கிறது என பரவலாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை எனவும், அது ஆதாரமற்றவை என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2ம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கையை மார்ச் முதல் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
February 21, 2025 8:10 PM IST


