சட்டவிரோத நுழைவு
ஜேம்ஸ் தீவின், வெஸ்ட்வே டிரைவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக, சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு 911 என்கிற உதவி எண்ணுக்கு வந்த அழைப்பிற்கு போலீசார் பதிலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜீன்ஸ் மட்டுமே அணிந்திருந்த ஆர்னால்டை சம்பவ இடத்தில் பிடித்தனர்.
என்பிசி-யுடன் இணைக்கப்பட்ட டபிள்யூசிபிடி – இன் படி, அர்னால்ட் தனது முன்னாள் காதலி இல்லாத போது, அவரது கேரேஜ் அடுக்குமாடி குடியிருப்பின் பக்கவாட்டு கதவு வழியாக உள்ளே நுழைந்தது தெரியவந்தது. பின்னர், ஷவரில் புகுந்த அவர், அங்கு இடுப்புக்கு கீழ் துணி ஏதும் இல்லாமல் நிர்வாணமாக இருந்தார். அவரது உள்ளாடைகள் ஷவரில் அப்புறப்படுத்தியிருப்பதையும் போலீசார் தெரிந்து கொண்டனர்.
அந்தப் பெண் இரவு உணவு முடித்து தனது அபார்ட்மெண்டிற்குத் திரும்பிய போது, அவர் தனது ஷார்ட்ஸை முகத்தில் மூடியவாறு, கையில் கத்தியை வைத்துக் கொண்டு அவளை பீதியடையச் செய்திருக்கிறார். பின்னர், அந்த பெண்ணின் தலைக்கு மேல் பிளேட் ஒன்றை கொண்டு சென்றதாககக் கூறப்படுகிறது. அவரது உயிருக்கும், பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறித்தும் பயந்த அவள், அவனைத் தள்ளிவிட்டாள்.
பின்னர் அர்னால்ட் அவளை கதவை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்து, தொடர்பு கொள்ள முடியாதவாறு அவளது கழுத்தை அறுப்பது போல் நடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் கத்தியை கீழே போட்டுவிட்டு, தனது இடது கையால் அவளது கழுத்தை நெரிக்கத் தொடங்கியதால், அவளுடைய பார்வை மங்கலாகிவிட்டது. பாதிக்கப்பட்ட அந்த பெண், அடையாளம் தெரியாத அந்த ஆணின் முகத்தில் இருந்து ஷார்ட்ஸை அகற்றிய போது தான், அது அவளுடைய முன்னாள் காதலன் ஜாக்சன் அர்னால்ட் என்பது தெரிய வந்தது என்று போலீஸ் அறிக்கை கூறியது.
இது வெறும் பிராங்க்
அர்னால்ட், அந்தப் பெண்ணிடம் இது ஒரு பிராங்க் என்றும், அவர் பேச விரும்புவதாகவும் கூறியதாகக் கூறப்படுகிறது. பின்னர், சத்தம் கேட்டதாகக் கருதிய அவளது அம்மாவிடம், ஒன்னுமில்லை என்று கூறும்படி ஜாக்சன் வலியுறுத்தியிருக்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அந்த பெண், தனது வீட்டிற்குள் ஓடினார், அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 911 என்ற எண்ணை அழைத்தனர்.
அர்னால்ட் அந்த இடத்தில் இருக்க அனுமதி இல்லை, அங்கு ஒருபோதும் வசிக்கவுமில்லை, அவரிடம் சாவியும் கிடையாது என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும், அவர் பல நூறு அடி தூரத்தில் தனது வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு, தன்னை கண்டுபிடிப்பதைத் தவிர்க்க தனது தொலைபேசியை விட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியை அதிகாரிகள் இன்னும் மீட்டெடுக்கவில்லை. அர்னால்டின் முதல் நீதிமன்ற வருகை ஜூன் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் காதலி வீட்டு பாத்ரூமில் ஒளிந்திருந்த நபர் செய்த அதிர்ச்சி செயல்.. காரணம் கேட்டு ஷாக் ஆன போலீசார்

