Last Updated:
கர்னூல் நகரில் வசுந்தரா, ஜஸ்வந்த், ஜோதி, ஸ்ருதி ஆகியோர் ஸ்ராவணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தியதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கருணாகர், ஸ்ராவணி முக்கிய பாத்திரங்கள்.
ஆந்திரா மாநிலம் கர்னூலில் முன்னாள் காதலனை பழிவாங்க அவரது டாக்டர் மனைவிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை செலுத்திய செவிலியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்னூலை சேர்ந்த மருத்துவரான கருணாகர், வசுந்தரா என்ற செவிலியரை காதலித்து வந்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், கருணாகர் ஸ்ராவணி என்ற மருத்துவரை திருமணம் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வசுந்தரா, கருணாகரை பழிவாங்க திட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது தனது நண்பரான ஜஸ்வந்த் என்பவர் உதவியோடு இருசக்கர வாகனம் மீது மோத வைத்துள்ளார்.
பின்னர் சாலையில் விழுந்து காயமடைந்த ஸ்ராவணிக்கு சிகிச்சை அளிப்பதுபோல் நடித்து ஆட்டோவில் ஏற்றிய வசுந்தரா, தனது நண்பர்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை ஊசி மூலம் ஸ்ராவணிக்கு செலுத்தியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் ஸ்ராவணி, தனது கணவரான கருணாகரிடம் கூறியதை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய காவலர்கள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில்
வசுந்தரா தனது நண்பர்களான ஜோதி, ஜஸ்வந்த், ஸ்ருதி ஆகியோர் உதவியுடன் சதிச்செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து 4 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமிருந்து எச்.ஐ.வி பாதித்த இரத்த மாதிரிகளை குற்றம் சாட்டப்பட்டவர் பெற்று, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இந்த மாதிரிகள் தேவை என்று கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இரத்தத்தை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்ததாகவும், பின்னர் சம்பவத்தின் போது அதே மாதிரியை பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.


