[ad_1]
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.