கடந்த ஆண்டு அக்டோபரில் வைத்திலங்கம் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களின் வீடுகள், அலுவலகங்கள் அமைந்துள்ள தஞ்சாவூா், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில் அப்போது பெயரளவுக்கு இயக்கப்பட்டு வந்த சில நிறுவனங்களில் லஞ்சம் வாங்கிய பணத்தை வைத்திலிங்கம் தரப்பு வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து திருச்சியில் சில மனைகள் வாங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்ததாகத் தெரிகிறது. இதன் தொடா்ச்சியாக நடந்த விசாரணையில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

