மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம்
100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாநில பங்களிப்பில் இருந்து நிதி தரப்படுமா என்ற கேள்விக்கு, செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறுகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பாலு குற்றம்சாட்டினார். ”ஒவ்வொரு வீட்டுக்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000, 12-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பெண்களுக்கு ரூ.1000, ஆண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறோம். ஆனால், மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டால் எப்படி நடத்த முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

