Last Updated:
முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஷிஃப்ட்களில் நடத்துவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிஃப்ட் முறையில் நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025-26ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. கணினி மூலமாக நடைபெறும் இந்தத் தேர்வுகள், காலை, மதியம் என இரு ஷிஃப்டுகளாக நடைபெறும் எனவும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வை 2 ஷிஃப்டுகளாக நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், முதுநிலை நீட் தேர்வை 2 ஷிஃப்டுகளாக நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்குத் தடை விதித்தனர்.
முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்த வேண்டும் என்றும் 2 ஷிஃப்டுகளில், 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்தப்படுவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


