கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தைவானில் உள்ள ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி பெண்மணி ஒருவர் 579,110 ரிங்கிட்டை இழந்தார்.
சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, முதலீடுகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட இணைய விண்ணப்பம் அணுக முடியாததாகி விட்டதாக நீலாய் மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாஷிம் இதனை தெரிவித்தார்.
இதன்பின் பாதிக்கப்பட்டவர் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்கத் தவறிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார் என்று அவர் மேலும் சொன்னார்.
இந்நிலையில் நேற்று காலை பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு 50 வயது என்றும், அவர் நீலாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி மனிதவள மேலாளராகப் பணிபுரிகிறார் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி தைவானில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் இணைய முதலீட்டுத் திட்டத்தை வழங்கிய ஒரு நபருடன் தான் தொடர்பு கொண்டதாகக் கூறினார். அதன்பின் அவர் இணையம் மூலமாக கட்டம் கட்டமாக பணம் செலுத்தி ஏமார்ந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணைகளை நடத்தி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்


