தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாம் தவணை
அதனைதொடர்ந்து, இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் ஒன்பது நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

