திருகோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது நேற்று (27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்த பெண் மட்டக்களப்பு வவுணதீவைச்சேர்ந்த 47 வயதுடையவர் எனப்படுகின்றது.

குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரும் நேற்று காலையில் அம்பாறைக்கு சென்றுள்ள நிலையில் சாரதி வீதியை மாறி பொத்துவில் நோக்கி பிரயாணித்த போது விநாயகபுரம் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதி பாதுகாப்புக்கு அமைத்த தூணில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் காயமடைந்த நால்வரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

