அவருக்கு எதிரான வழக்கில் 2005 அக்டோபரில் முதலில் குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்த வழக்கின் நிறைவாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிப் மற்றும் 3 லஷ்கர் பயங்கரவாதிகளும், ஸ்ரீநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து செங்கோட்டையைத் தாக்கும் திட்டத்தைத் தீட்டினர். அத்திட்டத்தின்படி செங்கோட்டைக்குள் நுழைந்த அபு ஷாத், அபு பிலால் மற்றும் அபு ஹைதர் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் தனித்தனி என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட முகமது ஆரிஃபின் மரண தண்டனையை 2007 செப்டம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தொடர்ந்து 2011-ல் உச்ச நீதிமன்றம் அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஆனால் அந்த மரண தண்டனைக்கு எதிராக அவர் மறு ஆய்வு மனு செய்ய, அதுவும் ஆகஸ்ட் 2012-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஜனவரி 2014-ல் ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

