• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முகமட் நபியை இழிவுபடுத்திய பேஸ்புக் பதிவு: 47 வயது நபர் பினாங்கில் அதிரடி கைது!

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
முகமட் நபியை இழிவுபடுத்திய பேஸ்புக் பதிவு: 47 வயது நபர் பினாங்கில் அதிரடி கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர் | மார்ச் 26, 2026:

முகமட் நபியை (ஸல்) இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 47 வயது உள்ளூர் நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில், ‘Sakti Sakti Sakti’ என்ற பெயரிலான பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்துப் போலீசாருக்குப் புகார் வந்தது என்று, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சூஸ் (Datuk Fadil Marsus) கூறினார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று இரவு 8:32 மணியளவில் பினாங்கின் பட்டர்வொர்த் (Butterworth) பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அந்தப் பதிவைப் பதிவிடப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் Vivo 29T ரக அலைபேசியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று முதல் மார்ச் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக்காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 298A: மத ரீதியான பகைமையை உருவாக்குதல், தண்டனைச் சட்டம் பிரிவு 505(c): வன்முறையைத் தூண்டும் வகையில் அறிக்கை விடுதல், மற்றும் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233: இணைய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இனம், மதம் மற்றும் அரச நிறுவனம் (3R) சார்ந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களைப் பதிவிடுவதையோ அல்லது பகிர்வதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என டத்தோ பாடில் அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

The post முகமட் நபியை இழிவுபடுத்திய பேஸ்புக் பதிவு: 47 வயது நபர் பினாங்கில் அதிரடி கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

யாழில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!

Next Post

Tamilmirror Online || “நிவாரணப் பொதி வழங்க வேண்டும்”

Next Post
Tamilmirror Online || “நிவாரணப் பொதி வழங்க வேண்டும்”

Tamilmirror Online || “நிவாரணப் பொதி வழங்க வேண்டும்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin