• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீன் பிடித்துறைமுக விரிவாக்க பணி.. “அனுமதி இல்லாமல் தொடர முடியாது..” தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மீன் பிடித்துறைமுக விரிவாக்க பணி.. “அனுமதி இல்லாமல் தொடர முடியாது..” தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 15, 2026 9:02 PM IST

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டம் தொடர தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Rapid Read
காரைக்கால்
காரைக்கால்

புதுச்சேரியின் காரைக்காலில் மீன் பிடித்துறைமுக விரிவாக்க பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டத்தை தொடர முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

காரைக்காலில் மீன்பிடித் துறைமுகமானது 2012-ல் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த துறைமுகத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக சுமார் 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மீன்பிடித்துறைமுக பகுதியில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுக அபிவிருத்திட்டம் அமைக்க கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்தார்.

இதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காரைக்காலைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற தீர்ப்பாயம், புதுச்சேரி கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தால் நடந்தப்பட்ட கருத்து கேட்பில் திட்டத்துக்கு ஆதரவாளராக இருக்கும் மீன்வளத்துறை இயக்குநரே தனது வழக்கிற்கு ஆணையத்தின் உறுப்பினராகவும், நீதிபதியாகவும் செயல்பட்டு உள்ளதை ஏற்க முடியாது என குறிப்பிட்டது.

இதையும் படிங்க: பூட்டிய காருக்குள் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்… காதலர் தினத்தில் நடந்த படுபயங்கரம்.. பகீர் பின்னணி!

திட்டம் தொடர அனுமதிக்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது. மேலும், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் இறுதியாக முடிவு எடுக்கும் வரை கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அளித்த அனுமதி நிறுத்திவைக்கப் படுவதாக தெரிவித்தனர். இவ்வழக்கு வரும் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Location :

Puducherry (Pondicherry)

தமிழ் செய்திகள்/இந்தியா/

மீன் பிடித்துறைமுக விரிவாக்க பணி.. “அனுமதி இல்லாமல் தொடர முடியாது..” தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!

Read More

Previous Post

Tamilmirror Online || இந்திய – பாகிஸ்தான் போட்டியில் ஜனாதிபதி அநுர

Next Post

81 லட்சம் மக்கள் 100 ரிங்கிட் சாரா நிதியுதவியைப் பெற்றுள்ளனர் – Malaysiakini

Next Post

81 லட்சம் மக்கள் 100 ரிங்கிட் சாரா நிதியுதவியைப் பெற்றுள்ளனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin