Last Updated:
COVID-19 India : கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் புதிதாக 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்துக்கு அடுத்தபடியாக, கர்நாடகத்தில் 58 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 41 பேருக்கும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 26 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தனர். அதேநேரம் ஒரே நாளில் 512 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
Delhi,Delhi,Delhi
June 03, 2025 12:03 PM IST