சட்டப்பேரவையில் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வெகுவிரைவில் முதலமைச்சர் அவர்கள், அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவன தலைவர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார். இந்த பயணத்தில் தமிழ்நாட்டில் தடம்பதிக்காத முக்கிய தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்போம் என்று தெரிவித்தார்.

