மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வரும் மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்கிறார்.
பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதிக்கு ராகுல் செல்லவுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏப். 22 ஆம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு – காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

