ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்காக (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்குமாறு ‘தேசிய கட்டமைப்பு தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த நிறுவனம் தமது கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை அடுத்து நாட்டில் அனைத்துப்பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்துள்ளன.
இந்த நிலையில் மீண்டும் மின்கட்டண உயர்விற்கு அனுமதி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

