
சுழற்சி முறையில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இதனை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானம் நேற்று அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சார தேவையினை மேலும் ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படுமென மின்சார சபை கூறியுள்ளது.
இதனிடையே, பௌர்ணமி தினமான நேற்றையதினம் சுழற்சி முறையிலான மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவில்லை.
நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன.
இதனையடுத்து, அவற்றைச் சீர் செய்து தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

