மலாக்கா, கம்போங் கு சயாங் புக்கிட் பாருவில் உள்ள ஒரு நல் வயலில் வாகனத்தை இயக்கும்போது, ஒரு பாராமோட்டர் ஆபரேட்டர் 30 மீட்டர் உயரத்தில் இருந்து தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மின்சார கேபிளில் மோதி கீழே விழுந்தார்.
மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறுகையில், இந்த சம்பவம் நேற்று காலை நிகழ்ந்ததாகவும், டியூயோங் அனைத்துலக கலாச்சார ஓட்டம் 2025 உடன் இணைந்து பாராமோட்டார் சந்தித்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், பாராமோட்டர் ஆபரேட்டரின் முகத்தில் மட்டுமே சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், வாகனத்திற்கு சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் பொதுமக்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
துன் பாத்திமா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில கிளப்பைச் சேர்ந்த நான்கு பாராமோட்டர்கள், தீவிர விளையாட்டு நிகழ்வுக்கான உபகரணங்களுடன் கலந்து கொண்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. பாராமோட்டரை இயக்கும் போது, ஒரு பாராமோட்டர் தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தது, பின்னர் 30 மீட்டர் உயரத்தில் இருந்து மைதானத்திற்கு அருகிலுள்ள நெல் வயல்களில் விழுந்ததார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
TNB குழு சம்பவ இடத்திற்கு வந்து பாராமோட்டர் மோதிய மின் கேபிளை ஆய்வு செய்ததாகவும், எந்த சேதமும் இல்லை என்பதைக் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார். நேற்று, கலாச்சார ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட விபத்தைக் காட்டும் 10 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோ வைரலானது.




