Last Updated:
தெலங்கானா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனை கண்காணிப்பாளர்களுக்கும் சுகாதாரத் துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தெலங்கானாவில் உள்ள சுகாதார அமைப்பை அம்பலப்படுத்தும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மருத்துவமனையின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட பிறகு, மருத்துவர்கள் போனின் டார்ச் லைட் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியானவுடன், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அலட்சியத்திற்காக, ஜஹீராபாத் பகுதி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வி. ஸ்ரீதர் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மருத்துவமனை ஊழியர்கள் மொபைல் போனின் டார்ச் லைட்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ఒకవైపు కరెంట్ కోతలు, మరోవైపు ఆసుపత్రిలో ఉన్న జనరేటర్ పని చేయదు. చివరకు సెల్ ఫోన్ లైట్ వెలుతురులో చికిత్స చేయాల్సిన దుస్థితి.
300 పైగా పేషెంట్లు వచ్చే జహీరాబాద్ ప్రభుత్వ ఏరియా ఆసుపత్రి పరిస్థితి ఇలా ఉంటే, గ్రామీణ ప్రాంతాల్లో ఉండే ఇతర ఆసుపత్రుల పరిస్థితి ఎలా ఉన్నట్లు.ఏడాదిన్నరగా… pic.twitter.com/rm1o4SKaXS
— Harish Rao Thanneeru (@BRSHarish) May 31, 2025
அதிகாரிகளின் கூற்றுப்படி, திடீர் மின் தடை மற்றும் ஜெனரேட்டரை இயக்குவதில் ஏற்பட்ட தாமதம், நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு, குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஒரு மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு, பல்வேறு சமூக ஊடக தளங்களில் விரைவாக வைரலானது. இந்த சம்பவத்தை கவனித்த தெலங்கானா சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்ம, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த விசாரணையானது சங்கரெட்டி கலெக்டர் மற்றும் தெலங்கானா வைத்திய விதான பரிஷத் (TVVP) ஆணையரால் நடத்தப்பட்டது.
விசாரணையில் மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தபோதிலும், அதை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் அவசரகால சிகிச்சைகளுக்கு தற்காலிகமாக, ஆனால் கடுமையான இடையூறு ஏற்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவரை சுகாதாரத் துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதற்கிடையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனை கண்காணிப்பாளர்களுக்கும் சுகாதாரத் துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஜெனரேட்டர்கள் எல்லா நேரங்களிலும் இயங்க வேண்டும் என்றும், நிர்வாக அலட்சியத்தால் எந்த நோயாளியும் பாதிக்கப்படக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுபவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த சம்பவம் குறித்து முன்னாள் சுகாதார அமைச்சரும், சித்திப்பேட்டை BRS எம்எல்ஏவுமான ஹரிஷ் ராவ், அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
X தளத்தில் அவர், “ஒருபுறம் மின்வெட்டு உள்ளது, மறுபுறம் மருத்துவமனையில் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. இறுதியாக, செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கும் ஜஹீராபாத் அரசு பகுதி மருத்துவமனையின் நிலைமை இப்படி இருந்தால், கிராமப்புறங்களில் உள்ள மற்ற மருத்துவமனைகளின் நிலைமை எப்படி இருக்கும்?” என்று பதிவிட்டுள்ளார்.
June 02, 2025 5:52 PM IST


