அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச்
சென்ற காரைதீவு காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் எவ்வாறு
உயிரிழந்தார் என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை

அதன்படி, சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரைதீவு காவல்துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

