அதன்பேரில், வழக்குப் பதிந்து லோக் ஆயுக்த விசாரணை நடத்தி வருகிறது. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது மனைவி பாா்வதிக்கு மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளைப் பெற்றுத் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வா் சித்தராமையா, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ளாா். இதனிடையே, பணப்பதுக்கல் தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

