
Last Updated:
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாறுபட்ட கட்டண நிர்ணயப் புகாரில் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாறுபட்ட கட்டண நிர்ணயப் புகாரில் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகின்றன. ஆன்ட்ராய்ட் போன்களில் இந்த ஆப்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணமும், ஐபோன்களில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இந்த புகார்கள் ஒன்றிய அரசின் கவனத்திற்கு வந்தது.
மேலும் தெரிந்துகொள்ள: ஐபோன் யூசர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் உபெர், ஓலா? வைரலாகும் பதிவு!
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுகர்வோர் அளித்த தொடர் புகாரிகளின் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
January 24, 2025 8:35 AM IST

