Last Updated:
அக்டோபர் 31, 2025-க்குள் அனைத்து வங்கிகளும் தங்களுடைய இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டல்களின் டொமைன் பெயரை .bank.in என்பதற்கு மாற்ற வேண்டும் என்று RBI அறிவுறுத்தியது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ICICI வங்கி, HDFC வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உட்பட இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் தங்களுடைய அதிகாரப்பூர்வ வெப்சைட்டுகளை .com அல்லது .co.in என்ற டொமைன் பெயரை .bank.in என்ற புதிய டொமைன் பெயருக்கு மாற்றி உள்ளனர். பாதுகாப்பை வலுப்படுத்தவும், நம்பகமான வங்கி வெப்சைட்களை கஸ்டமர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அக்டோபர் 31, 2025-க்குள் அனைத்து வங்கிகளும் தங்களுடைய இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டல்களின் டொமைன் பெயரை .bank.in என்பதற்கு மாற்ற வேண்டும் என்று RBI அறிவுறுத்தியது. பிஷிங் மற்றும் போலியான வெப்சைட் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்த மாற்றமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம் செய்வதற்கான கடைசி தேதி ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் இனி அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட்டுகளைப் பயன்படுத்தும்போது, இந்த புதிய வெப்சைட் முகவரியில் லாகின் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய சில வருடங்களாகவே பல யூசர்கள் பிஷிங் மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். இதில் மோசடிக்காரர்கள் உண்மையான வங்கி வெப்சைட்டுகளின் URL போலவே இருக்கும் போலியான வெப்சைட்டுகள் URL-களை உருவாக்கி அதன் மூலமாக வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள், தனிநபர் விவரங்கள் போன்ற தகவல்களைத் திருடி பொருளாதார மோசடிகளை செய்து வருகின்றனர்.
இந்த புதிய .bank.in என்ற டொமைன் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மூலமாக ஒழுங்கமைக்கப்படும் சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது நம்பகமான வங்கி நிறுவனங்கள் மட்டுமே இதற்கு பதிவு செய்து, பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் வங்கி மோசடிகள் 2025 நிதி ஆண்டில் எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும், இதில் ஈடுபட்டுள்ள மொத்த தொகையானது கிட்டத்தட்ட 3 மடங்காக உயர்ந்துள்ளது என்று மே மாதத்தில் வெளியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
இதில் பெரும்பாலான மோசடிகள் டிஜிட்டல் பேமென்ட் பரிமாற்றங்களோடு தொடர்புடையதாக இருக்கின்றன. தனியார் வங்கிகள் சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மோசடி செய்யப்பட்ட பணத்தில் பெரும் பங்கு பொதுத்துறை வங்கியில் இருந்து திருடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
November 15, 2025 10:15 PM IST


