Last Updated:
Kabaddi Tournament| ராசிபுரம் அருகே 65 ஆம் ஆண்டாக மாநில அளவிலான கபடி போட்டி. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கமும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாங்கவுண்டம்பட்டி பகுதியில் 65 ஆம் ஆண்டாக மாநில அளவிலான ஆடவர் கபடி போட்டி நடைபெற்றது.
இளையவர் சடுகுடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற போட்டியை, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார். சேலம், கரூர், ஈரோடு, மதுரை, சென்னை, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 19 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்ற மதுரை கஸ்டம்ஸ் அணி முதல் பரிசான 65 ஆயிரம் ரூபாயும், சென்னை வருமானவரித்துறை அணி 2வது பரிசு பெற்று 45,000 ரூபாய் பணம் மற்றும் சூழல் கோப்பைகளை பெற்றனர்.
இதில் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து திரளான கபடி ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டியினை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து 65 ஆண்டாக ஆசிய சாதனை தொடர் ஆண்கள் போட்டி கபடி போட்டி நடைபெற்று வரும் நிலையில் போட்டிக்கு Asian Records Academy, India Records Academy, Tamilan Book of Records ஆகிய அமைப்புகள் இந்த சாதனையை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

