மாத்தளை, கைக்காவல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் சென்ற கிராம உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாத்தளை – ரத்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் ஒருவர் ஆவார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

