உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் மகளிர்க்கான ஓபன் கராத்தே போட்டி, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் சோபுகாய் சிட்டோரியு கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மகளிர்க்கான முதல் ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை மாநகராட்சி மேயர் இராமநாதன், கராத்தே கழக செயலாளர் முனுசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். மகளிருக்கான இப் போட்டியில் பள்ளி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கட்டா, குமித்தே ஆகிய 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, தங்களது விளையாட்டுத் திறனை வெளிக்காட்டினர்.
இப்போட்டியில் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குமித்தேவில் தேவநிலாணி முதலிடமும் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கட்டாவில் அபூர்வா முதலிடமும் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கட்டாவில் ரஷ்மியா முதலிடமும் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து மற்ற பிரிவுகளில் வென்ற அனைத்து மாணவிகளுக்கும் மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கராத்தே வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…