• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாணவர்கள் போராட்டத்திற்கு பணிந்த ஜார்க்கண்ட் அரசு! JSSC-CGL தேர்வு ரத்து.. சிஐடி விசாரணைக்கு உத்தரவு | Jharkhand Student Protests: Hemant Soren govt Cancels JSSC-CGL, TDPL Exams Over Exam Irregularities

GenevaTimes by GenevaTimes
August 17, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மாணவர்கள் போராட்டத்திற்கு பணிந்த ஜார்க்கண்ட் அரசு! JSSC-CGL தேர்வு ரத்து.. சிஐடி விசாரணைக்கு உத்தரவு | Jharkhand Student Protests: Hemant Soren govt Cancels JSSC-CGL, TDPL Exams Over Exam Irregularities
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Published: Monday, August 17, 2026, 22:24 [IST]

ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசு வேலைகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மாணவர் கோரிக்கைக்கு ஜார்க்கண்ட் அரசு பணிந்துள்ளது. JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கடந்த 2014 முதல் டிடிஎல்பி மூலம் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அறிவித்தார்.

கடந்த மாதம் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியினர் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியது அனைவருக்கும் தெரியும். அந்த போராட்டத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தது.

Jharkhand Student Protests

பணிந்த சோரன் அரசு

அரசு தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக இந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக இது இருந்த நிலையில், அதை ஜார்க்கண்ட் அரசு ஏற்றுள்ளது.

ஜார்க்கண்டில் போராட்டம் தீவிரம்.. ராகுல் பக்கம் வண்டியை திருப்பிய மாணவர்கள்! காங்கிரஸ்க்கு நெருக்கடி

ஜார்க்கண்டில் போராட்டம் தீவிரம்.. ராகுல் பக்கம் வண்டியை திருப்பிய மாணவர்கள்! காங்கிரஸ்க்கு நெருக்கடி

சிபிஐ விசாரணை

மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் டிடிபிஎல் நடத்திய அனைத்து தேர்வுகளும் சிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும், தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனியாக விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தேர்வு முறைகேடுகள் மற்றும் ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை கோரி ஜார்க்கண்டில் மாணவர்கள் கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் அரசு தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

விடிய விடிய விஸ்வரூபம் எடுத்த மாணவர் போராட்டம்.. தடியடி, கண்ணீர் புகை.. நள்ளிரவில் திணறிய போலீஸ்!

விடிய விடிய விஸ்வரூபம் எடுத்த மாணவர் போராட்டம்.. தடியடி, கண்ணீர் புகை.. நள்ளிரவில் திணறிய போலீஸ்!

தேர்வு ரத்து

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “டிடிபிஎல் நடத்திய அனைத்து தேர்வுகளும், டிடிபிஎல் வெளியிட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. டிடிபிஎல் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு அனைத்தும் ரத்து செய்யப்படும். மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு உறுதியாக இருக்கிறது.

தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட சிஐடி மற்றும் எஸ்ஐடி விசாரணைகளில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியில் சேர்ந்த சிலர் தேர்வு மோசடி மற்றும் முறைகேடுகள் ஈடுபட்டதாக கைதும் செய்யப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளும் சிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்படும். மேலும், முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணையும் நடைபெறும்.

தடியடி, தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை வீச்சு! ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் புகுந்த இளைஞர்கள்!

தடியடி, தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை வீச்சு! ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் புகுந்த இளைஞர்கள்!

நடவடிக்கை எடுப்போம்

தேர்வுகளை நடத்துவதற்கான தெளிவான எஸ்ஓபி விதிமுறைகளை ஜார்க்கண்ட் அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் அவை முறையாக பின்பற்றப்படவில்லை. சமீபத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடக்க அதுவே காரணம். எதிர்காலத்தில் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை முழுமையாக சீர்திருத்தி, வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மாணவர்கள் தங்களது புகார்களை நேரடியாக பதிவு செய்வதற்காக அரசு தனி இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது. அதில் பெறப்படும் புகார்கள், தேர்வு முறைகேடுகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அமிதாப் கௌஷல் தலைமை வகிப்பார் என்றும் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.

English summary

Jharkhand CM Hemant Soren has announced the cancellation of JSSC-CGL and TDPL-conducted exams amid a 24-day student protest(ஜார்க்கண்ட் மாநிலத்தில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்): Jharkhand Student Protests latest news in tamil.

Read More

Previous Post

மூன்றாவது நாளாகக் களைகட்டிய யாழ். உணவுத் திருவிழா!

Next Post

Gold Price Prediction | இந்த மாத இறுதியில் தங்கம் விலை இதுதான்.. ராபர்ட் கியோசாகி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Prediction | இந்த மாத இறுதியில் தங்கம் விலை இதுதான்.. ராபர்ட் கியோசாகி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Gold Price Prediction | இந்த மாத இறுதியில் தங்கம் விலை இதுதான்.. ராபர்ட் கியோசாகி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin