Last Updated:
கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்த முக்கிய கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளாதது பரபரப்பாக பேசப்பட்டது.
சலசலப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தாங்கள் இன்னும் ஒன்றாகவே பயணிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் குறித்த தனது தடாலடியான கருத்துகளால் சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் மனக்கசப்பு இருப்பதாகவும், எனவே, விரைவில் சசி தரூர் பா.ஜ.வில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் உலா வந்தன.
கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்த முக்கிய கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளாதது பரபரப்பாக பேசப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதில் எல்லாம் தனக்கு ஆர்வமில்லை என்றார். சந்திப்பு நல்ல வகையிலேயே அமைந்ததாகவும் சசி தரூர் குறிப்பிட்டார்.


