• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியா-புரூணை எல்லையில் மாயமான JUPEM அதிகாரி சடலமாக மீட்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மலேசியா-புரூணை எல்லையில் மாயமான JUPEM அதிகாரி சடலமாக மீட்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர் | மார்ச் 26, 2026

மலேசியா மற்றும் புரூணை நாட்டு எல்லைப் பகுதியில் எல்லை நிர்ணயம் மற்றும் நில அளவைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த மார்ச் 17 முதல் மாயமான மலேசிய நில அளவைத் துறை (JUPEM) அதிகாரி, ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த அதிகாரி டோனிசியஸ் கேப்ரியல் கோ (Donysius Gabriel Goh, 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சரவாக், மிரி பிராந்திய நிலப்பரப்பு அலுவலகத்தில் பொது உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த வாரம் லாவாஸ் (Lawas) பகுதியில் உள்ள உலு தெம்புரோங் ஆற்றில் தனது ஐந்து சக ஊழியர்களுடன் கடக்க முயன்றபோது, பலத்த நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

அவர் மாயமான இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப், டோனிசியஸின் மறைவிற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “நாட்டின் எல்லைகளைத் துல்லியமாக அளவிடும் கடினமான பணியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு எப்போதும் நினைவு கூறப்படும்,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இந்தத் தேடுதல் வேட்டையில் புரூணை அரசு வழங்கிய மேலான ஒத்துழைப்பிற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். புரூணை தரைப்படை, கூர்க்கா படைப்பிரிவு மற்றும் ராயல் புரூணை விமானப்படை ஆகியவை இந்த மீட்புப் பணியில் முக்கியப் பங்காற்றின. மேலும் அடர்ந்த மற்றும் செல்வதற்கு கடினமான காட்டுப் பகுதியிலிருந்து உடலை மீட்டெடுக்கப் புரூணை விமானப்படை ஹெலிகாப்டரை வழங்கியது என்றார்.

தற்போது உயிரிழந்த JUPEM அதிகாரியின் உடல் புரூணையில் உள்ள ரிபாஸ் (RIPAS) மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த டோனிசியஸிற்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சகம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான ஆவணப் பணிகள் மற்றும் அடையாளச் சோதனைகள் முடிந்தவுடன், அவரது உடல் மலேசியாவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? – உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

Next Post

யாழ். பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!

Next Post
யாழ். பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!

யாழ். பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin