சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் நேற்று(மே 19) ஏற்பட்டது.சோதனை சாவடிகளில் கூடுதலான பாதுகாப்பு சோதனை நடவடிக்கைக் காரணமாக போக்குவரத்து நெரிசலை பயணிகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
மலேசியாவில் ஜொகூர் பாருவுக்கு அருகே உள்ள காவல்நிலையத்தில் மே 16-ஆம் தேதி தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர்.

