கோலாலம்பூரில் உள்ள உணவகத்தில் ஆடவர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டி*ல் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்தார்.
நேற்று முன்தினம் ஜூன் 13 ஆம் தேதி இரவு நண்பர்களுடன் ஆடவர் ஒருவர் உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இந்தியாவில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: சிறுவர் உட்பட 7 பேர் பரிதாப மரணம்
அப்போது, கருப்பு நிற உடையில் இருந்த ஆடவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் அவர்களை நோக்கி சுட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இதில், 30 முதல் 50 வயதுடைய மூன்று ஆடவர்களை அவர் சுட்டதாகவும், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலேசிய காவல்துறை கூறுகையில்; இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேண்டி அங்குள்ள மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதே போல, காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் ஒருவர் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10:50 மணியளவில் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஜாலான் துன் சம்பந்தனில் அமைந்துள்ள உணவகத்தில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
மலேசிய போலீசார் விசாரணை
இந்த சம்பவத்தை மலேசிய காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாக ஃப்ரீ மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மரணத்தை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் என்ன நோக்கம் உள்ளது என்பதையும் அதிகாரிகள் ஆராய்வார்கள் என சொல்லப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறைத் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் கூறினார்.
துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணைகளுக்கு உதவ காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் ஊக்குவித்தார்.
சிங்கப்பூர்-மலேசியா அதிரடி சோதனை: 11 பேர் கைது – 41 பேர் மீது விசாரணை
Photo: Sin Chew Daily

