
மலேசியாவின் Sabah மாநிலத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரிக்டர் அளவில் 7.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் Borneo தீவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், இந்த அதிர்வு சுனாமி அச்சுறுத்தலாக மாறவில்லை என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகின. முதலில் ரிக்டர் அளவில் 6.5 என பதிவு செய்திருந்தாலும், பின்னர் அது தவறான அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டு அரசு தாய்லாந்தில் எந்த நிலநடுக்கமும் பதிவாகவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

