• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியாவில் 1300 கோடி ரிங்கிட் உரிமை கோரப்படாமல் உள்ளது: கணக்காய்வுத் துறை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 7, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
மலேசியாவில் 1300 கோடி ரிங்கிட் உரிமை கோரப்படாமல் உள்ளது: கணக்காய்வுத் துறை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவில் உரிய உரிமையாளர்களால் கோரப்படாத சுமார் 1300 கோடி (13 பில்லியன்) ரிங்கிட் பணம் இருப்பது கணக்காய்வுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இவ்வளவு பெரிய தொகை பல்வேறு கணக்குகளில் தேங்கிக் கிடப்பதாக நாட்டின் கணக்காய்வுத் துறைத் தலைவர் டத்தோ ஸைனானி ஜூசோ தெரிவித்துள்ளார்.

இதில் 700 கோடி ரிங்கிட் ‘உரிமை கோரப்படாத அறக்கட்டளை கணக்கில்’ (Unclaimed Moneys Trust Fund) பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தொகை 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவராலும் உரிமை கோரப்படாததால், சட்டப்படி நாட்டின் ஒருங்கிணைந்த வருவாய்க் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், இத்தொகையை எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுத்துக் கொள்ள முடியும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டத்தோ ஸைனானி, “உரிமை கோரப்படாத பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி இடைத்தரகர்களோ அல்லது ஏஜெண்டுகளோ அணுகினால் அவர்களை நம்ப வேண்டாம். இத்தகைய பணிகளைச் செய்ய அரசாங்கம் எந்தவொரு முகவரையும் நியமிக்கவில்லை,” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பொதுமக்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணம் ஏதேனும் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க, அதிகாரப்பூர்வமான eGUMIS (egumis.anm.gov.my) அகப்பக்கத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப வசதிகள் குறைந்த கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும் நடமாடும் பேருந்து சேவை மையங்கள் (Mobile counters) மூலம் இச்சேவையை அரசு வழங்கி வருகிறது. தகுதியுடைய அனைவரும் தங்களின் அடையாளச் சான்றுகளுடன் விரைந்து விண்ணப்பிக்குமாறு கணக்காய்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || வடக்கின் சமரில் யாழ். மத்தி அதிரடி வெற்றி

Next Post

பற்றி எரியும் ஈரானின் முக்கிய கட்டமைப்பு! தெஹ்ரானில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழை

Next Post
பற்றி எரியும் ஈரானின் முக்கிய கட்டமைப்பு! தெஹ்ரானில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழை

பற்றி எரியும் ஈரானின் முக்கிய கட்டமைப்பு! தெஹ்ரானில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin