மலேசியாவில் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’ உட்பட மூன்று சந்தேக நபர்களை ஏற்றி வந்த சிறிலங்கன் விமானம், மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
இந்த மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ALK315 மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
சிறப்பு காவல்துறை குழுவினரால் நடவடிக்கை
காவல் உதவி கண்காணிப்பாளர் றொகன் ஒலுகல உள்ளிட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் பிரதான அடியாள் என்று கருதப்படுகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

