கோலாலம்பூர்:
இன்று மாலை 7 மணி வரை 11 மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலையை எதிர்கொள்ளும் பகுதிகளாக,
• பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக்.
• கிளாந்தான்: பாசிர் மாஸ், ஜேலி, தானா மேரா, மாச்சாங், கோலா கிராய் மற்றும் குவா முசாங்.
• திரெங்கானு: பெசுட் மற்றும் உலு திரங்கானு.
• பகாங்: கேமரன் மலை, லிப்பிஸ், ரவுப், ஜெராண்டுட், பெந்தோங், தெமர்லோ, மாரான், பேரா மற்றும் ரொம்பின்.
• சிலாங்கூர்: சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட்.
• கோலாலம்பூர்.
• நெகிரி செம்பிலான்: ஜெலுபு, சிரம்பான், கோலா பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின்.
• ஜோகூர்:சிகாமாட், பத்து பகாட், மெர்சிங், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு.
• சரவாக்: கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெத்தோங், சரிக்கே, சிபு, மிரி மற்றும் லிம்பாங் ஆகியவற்றை அது குறிப்பிட்டுள்ளது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் தீவிரம் ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் (20mm) அதிகமாக இருக்கும்போதும், அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதும் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்த குறுகிய கால எச்சரிக்கையானது வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் 6 மணிநேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




