கோலாலம்பூர்:
மலேசியாவில் 2025-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி (Online Scam) வழக்குகள் 95,000-ஐத் தாண்டியுள்ளதுடன், இதனால் பொதுமக்கள் இழந்த ஒட்டுமொத்தத் தொகை RM3.80 பில்லியனை எட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பி இன் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.



