The post மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்த சுத்தம் செய்யும் இயந்திரம்!! நோயாளிகள் வெளியேற்றம்!! appeared first on SG Tamilan.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஜூலை 8-ஆம் தேதி சுமார் 7 மணியளவில் வார்டு 76-ஐ சுத்தம் செய்யும் இயந்திரம் ஒன்று தீப்பிடித்தது.இச்சம்பவத்தை அடுத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தை சிங்கப்பூர் பொது மருத்துவமனை அதன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அறையில் புகை மூட்டத்தால் தண்ணீர் தெளிப்பான் கருவி பயன்படுத்தப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வார்டில் இருந்த நோயாளிகள் மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்த தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரி சென்ற போது தீ அணைக்கப்பட்டு விட்டதாக நிர்வாகம் கூறியது.
அதன்பின் சுமார் 9 மணியளவில் நோயாளிகள் மீண்டும் வார்டுக்கு திரும்பினர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணையில், வார்டில் இருந்த சுத்தம் செய்யும் இயந்திரத்தை சார்ஜ் போட்ட போது தீப்பிடித்தது தெரிய வந்தது.
Follow us on : click here
The post மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்த சுத்தம் செய்யும் இயந்திரம்!! நோயாளிகள் வெளியேற்றம்!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin