Last Updated:
Maasi Karuvadu: ஒவ்வொரு கருவாடும் ஒவ்வொரு முறையில் தயாரிக்கப்படுகிறது. சில கருவாடுகள் உப்பு மட்டும் தடவி வெயிலில் காய வைக்கப்படுகிறது, சில கருவாடுகள் குழியில் புதைத்து வைத்து தயார் செய்யப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்களது உணவில் குடும்பத்தில் உள்ளவர்கள் அதீதக் கவனம் செலுத்துவார்கள். பார்த்துப் பார்த்து அமைக்கப்படும் அவர்களது உணவுப் பட்டியலில் நிச்சயம் இந்த மாசி கருவாடு இடம் பிடிக்கும்.
இந்த கருவாட்டைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று கூறப்படுகிறது. இந்த மாசி கருவாடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைக் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கருவாடும் ஒவ்வொரு முறையில் தயாரிக்கப்படுகிறது. சில கருவாடுகள் உப்பு மட்டும் தடவி வெயிலில் காய வைக்கப்படுகிறது, சில கருவாடுகள் குழியில் புதைத்து வைத்து தயார் செய்யப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் இந்த மாசி கருவாடானது அவித்து, வெயிலில் காய வைத்து தயார் செய்யப்படுகிறது.
சூரை மீன் என்றும், ஆங்கிலத்தில் டூனா எனவும் அழைக்கப்படும் மீனை முதலில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து, இந்த சூரை மீனை அதில் போட்டு ஒரு நாள் முழுவதும் அவிக்கின்றனர்.
பிறகு மீன் நன்றாக வெந்த பின், அதனை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்த பின்னர் அதனை இரண்டாவது நாள் இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக நீள வாக்கில் வெட்டி வெயிலில் காய வைக்கின்றனர்.
இவ்வாறு இந்த மாசி கருவாடு 10 நாட்கள் காய வைக்கப்படுகிறது. இவ்வாறு வெயிலில் நன்றாகக் காய வைத்த பின்னர் அதிலிருக்கும் முட்கள் அனைத்தும் தானாக உதிர்ந்து விடுகிறது. இவ்வாறு தான் மாசி கருவாடு தயாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Coconut Farming: 3 ஆண்டில் காய்க்கும் தென்னை… அதிகரிக்கும் தேங்காய் விலையால் ஆர்வம் காட்டும் விவசாயிகள்…
ஒரு கிலோ மாசி கருவாடானது 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கு தயாரிக்கப்படும் மாசி கருவாடானது வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
March 03, 2025 10:30 AM IST

