Last Updated:
கடந்த 2 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை 5 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1300 கோழிப்பண்ணைகளில் 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
அதன்படி கடந்த 2 நாட்களில் 25 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில் முட்டையின் கொள்முதல் விலை ரூபாய் 4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை தேக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறித்து கோழிப் பண்ணையாளர் கூறுகையில், “நாள் ஒன்றுக்கு 60 இலட்சம் முட்டைகள் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் உற்பத்தியாகும் முட்டை அன்றைய தினமே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்குத் தினசரி 50 இலட்சம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன.
இதையும் படிங்க: கழிப்பறை பயன்படுத்த 800 ரூபாய் கட்டணம்… ஆன்மீக தலத்தில் புதுவித ஸ்கேம்…
நாமக்கல் மண்டலத்தைப் பொறுத்தவரை முட்டை தேக்கம் இல்லை. கடந்த 2 நாட்களில் முட்டை விலையும் 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை 5 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. கோடைக்காலத்தில் கடும் வெயில் காரணமாகக் கோழிகளுக்கு பாக்கர்ஸ் என்ற நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரைத் தெளித்து கோழியைப் பாதுகாத்து வருகின்றோம்.
தமிழக சுகாதாரத்துறை பச்சை முட்டைகளில் மயோனஸ் தயாரிப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு முட்டை விற்பனை ஆகவில்லை எனக் கூறுவது தவறு. முட்டைகள் வழக்கம் போல் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Namakkal,Tamil Nadu
April 29, 2025 9:46 AM IST

