• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மனைவி இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவன்.. சாலை விபத்தில் உயிரிழப்பு!

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மனைவி இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவன்.. சாலை விபத்தில் உயிரிழப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 29, 2025 11:01 AM IST

பஞ்சாபில் பணிபுரிந்த சஞ்சய், தனது மனைவி இறந்த செய்தியைக் கேட்டு, தனது தம்பி ரிங்குவுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றதாகவும், வழியில் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News18News18
News18

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இருந்து வேதனையளிக்கும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. தனது மனைவி உயிரிழந்த செய்தியைக் கேட்டு அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர், சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அறிக்கையின் படி, உத்தர பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தின் மிர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்தார், அவரது தம்பி பலத்த காயமடைந்தார். இந்தத் தகவலை போலீசார் சமீபத்தில் தெரிவித்தனர். இறந்த இளைஞன் பஹ்ரைச் மாவட்டத்தின் கேசர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியின் ராமுபூர் ரகுவீர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (28) என்றும், காயமடைந்த இளைஞர் அவரது சகோதரர் ரிங்கு (22) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.

பஞ்சாபில் பணிபுரிந்த சஞ்சய், தனது மனைவி இறந்த செய்தியைக் கேட்டு, தனது தம்பி ரிங்குவுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றதாகவும், வழியில் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வடக்கு மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) முகேஷ் சந்திர மிஸ்ரா கூறியதாவது, “சஞ்சய் மற்றும் ரிங்கு இருவரும் பஞ்சாபில் கூலி வேலை செய்து வந்தனர். பரேலி மாவட்டத்தின் மிர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நடந்த சாலை விபத்தில் சஞ்சய் உயிரிழந்தார்”.

உயிரிழந்த சஞ்சய், பூஜா என்ற பெண்ணை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, தனது மனைவி இறந்த செய்தி கிடைத்ததும், சஞ்சய் நிலைதடுமாறி, விரைவில் வீட்டிற்கு வருவதற்காக தனது தம்பி ரிங்குவுடன் மோட்டார் சைக்கிளில் பஞ்சாபிலிருந்து பஹ்ரைச்சிற்குப் புறப்பட்டார். பின்னர் திங்கட்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது.

காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், ஆனால் சஞ்சய் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் காவல்துறை கூறியது. ரிங்குவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, எனவே அவர் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சஞ்சயின் உடல் பஹ்ரைச்சிற்கு அனுப்பப்பட்டது.

சஞ்சய் மற்றும் அவரது மனைவியின் இறுதிச் சடங்குகள் ஒன்றாக நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான அடையாளம் தெரியாத வாகனம் மீது மிர்கஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஏஎஸ்பி தெரிவித்தார். விபத்துக்குள்ளான வாகனத்தைக் கண்டுபிடிக்க அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

First Published :

March 29, 2025 11:01 AM IST

Read More

Previous Post

டெங்கு ஒழிப்பு திட்டம் ஆரம்பம்

Next Post

ஐபிஎல் 2025: 17 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த ஆர்சிபி.. ஒரே ஒரு தோல்வியால் சிஎஸ்கேவுக்கு வந்த சோதனை.. சரிந்த ரன் ரேட்!

Next Post
ஐபிஎல் 2025: 17 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த ஆர்சிபி.. ஒரே ஒரு தோல்வியால் சிஎஸ்கேவுக்கு வந்த சோதனை.. சரிந்த ரன் ரேட்!

ஐபிஎல் 2025: 17 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த ஆர்சிபி.. ஒரே ஒரு தோல்வியால் சிஎஸ்கேவுக்கு வந்த சோதனை.. சரிந்த ரன் ரேட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin