ஆந்திரத்தில் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்திரித்த கடன் செயலி முகவர்களால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திரப் பிரதேசத்தில் மீனவரான சுரேதா நரேந்திரா (21) என்பவரும் அகிலா தேவியும் (24) ஒன்றரை மாதத்திற்கு முன்னர்தான், காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மோசமான வானிலையால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, குடும்பச் செலவுகளுக்காக வேறு வழியில்லாமல் ஆன்லைன் செயலி மூலம் சுரேதா கடன் பெற்றார்.
மேலும், அந்தக் கடன்தொகையைச் செலுத்தாமல், சுரேதா காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், கடனளித்த முகவர்கள் சுரேதா மனைவியின் புகைப்படத்தை நிர்வாணமாகச் சித்திரித்து, விலை என்று ஒன்றையும் குறிப்பிட்டு, அதனை சுரேதாவின் தொலைபேசி தொடர்பில் இருந்த அனைவருக்கும் அனுப்பியுள்ளனர்.

