முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்குச் சொந்தமான ஐந்து வங்கிக் கணக்குகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்போது, 14 நாட்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினரிடம் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு ஒரு அரச வங்கி உட்பட ஐந்து தனியார் வங்கிகளின் மேலாளர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அவரது வங்கிக் கணக்கு அறிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம் என சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்ற அனுமதி
ஊழலுக்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், 2011, 2013, 2015 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்குரிய சொத்து மற்றும் பொறுப்பு விபர அறிக்கைகளை மனுஷ நாணயக்கார சமர்ப்பிக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே இந்த ஐந்து வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

