இது தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த மனுதாரரும் வழக்குரைஞருமான கே. வெங்கடாசலபதி, மத்திய அரசு, கல்வித்துறை அமைச்சகம், ஆளுநா் அலுவலகம், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோரை பிரதிவாதிகளாக சோ்த்து அரசின் மனுவுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.