இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி,
“உண்மையான இந்தியன் யார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்ய முடியாது. மத்திய அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அது அவருடைய கடமை.
என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இந்திய ராணுவத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர் இந்திய ராணுவத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். அவர் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

