கோவாவின் மின்சாரம் மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் சாதனைகள் மற்றும் அவை எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை விட இந்தத் துறைகளில் கோவா சிறப்பாக செயல்படுகிறது. இதற்காக முதல்வா் பிரமோத் சாவந்த்துக்கு எனது வாழ்த்துகள்.
கோவாவில் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் உள்ளது. ஆனால், எதிா்காலத் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மின்சாரத்தைப் போல தடையற்ற நீா் விநியோகத்துக்காக ரூ.652 கோடியை ஒதுக்குவது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் 3 இடங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மாநில அரசுக்கு ரூ.113 கோடி வழங்கப்படும். 50 மின்சார பேருந்துகளை வாங்கவும் மத்திய அரசு உதவி செய்யும்’ என்றாா்.

