புக்கிட் பஞ்சாங் பகுதியில் மதுபோதையில் ஆடவர் ஒருவர் அரை நிர்வாணமாக படுத்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.
லே சாம்ப்-NKF டயாலிசிஸ் நிலையத்திற்கு வெளியே கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் காணப்பட்டார் என Stomp கூறியுள்ளது.
லிட்டில் இந்தியாவில் சந்தேக அடிப்படையில் ஆடவர் கைது
அன்றிரவு சுமார் 11.30 மணியளவில் பாங்கிட் சாலை புளாக் 275ல் அந்த ஆடவரை பார்த்ததாக அதன் வாசகர் கூறினார்.
அது பகிர்ந்த காணொளி மற்றும் புகைப்படங்களில், ஒரு டி-சர்ட் மட்டுமே அணிந்திருந்த அந்த ஆடவர் தரையில் படுத்துக் கொண்டிருந்தார்.
மேலும் அவர் அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் நிற்பதையும் அதில் காணலாம்.
நகர பகுதிகளில் தனிமையில் இருக்கும்போது இதுபோன்ற நிர்வாண மனிதரைப் பார்ப்பது சற்று பதட்டமாக இருந்ததாக அவர் சொன்னார்.
அதிர்ஷ்டவசமாக, NKF ஊழியர்கள் அங்கிருந்ததாகவும், அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாசகர் கூறினார்.
அன்று இரவு 11 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்ததாக Stomp கூறியது.
பின்னர், பொது இடத்தில் மதுபோதையில் இருந்த 49 வயதுமிக்க அவர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெற்று வருகின்றது.
கோவை – சிங்கப்பூர் இடையேயான விமான நேரம் மாற்றம்!
PHOTO: STOMP

