”இந்த மதுபான ஆலையில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, 15-16 மணி நேரம் வேலை வாங்குவதாக தகவல் கிடைத்தவுடன், எஸ்ஓஎம் ஆலையில் எங்கள் குழுவினருடன் சோதனையிட வந்தோம். சோதனையில், இங்கு வேலை பார்த்து வந்த குழந்தைகளை மீட்டு நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம்” என்று என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனுங்கோ தெரிவித்தார்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “ரைசென் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது என் கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து, தொழிலாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் இருந்து விரிவான தகவல்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)