தொழில்துறையின் தேவைகளைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் திறன் பயிற்சியை மேம்படுத்துவதற்கு திறன் கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
அக்ஷய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விநியோக முறை மூலம் இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்ரபதி சிவாஜி அகன்ஷா மையங்கள் மூலம் 10 லட்சம் புதிய தொழிலதிபா்கள் உருவாக்கப்படுவா். 2027-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ உருவாக்க, 500 சுயஉதவி குழுக்களைக் கொண்ட ஒரு தொழில் குழுமம் உருவாக்கப்படும்.
விவசாயிகளின் கொள்முதல் மீதான எஸ்ஜிஎஸ்டி, மானியமாக விவசாயிகளுக்கே திரும்ப வழங்கப்படும். அத்தியாவசியப் பொருள்களின் விலை நிலையாக பராமரிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

&w=1200&resize=1200,675&ssl=1)